தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு 02.08.2025 அன்று உணர்வுபூர்வமாகவும் பேரெழுச்சியுடனும் நடைபெறவுள்ளது.
மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு...





தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வினை நடத்துவதற்காக உலகெங்கும் பரந்துவாழும் முன்னாள் போராளிகள் அணிதிரண்டு “காலக்கடமை “என்னும் பொறிமுறை ஊடாக இயங்கி, தற்போது “மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்” என்னும் கட்டமைப்பாக பணிகளினை முன்னெடுத்து வருகிறோம்.
தலைவருக்கான வீரவணக்க நிகழ்வு ஐரோப்பிய நாடுகள் தழுவிய ஒன்றிணைந்த நிகழ்வாக, எதிர்வரும் 02.08.2025, சனிக்கிழமை அன்று சுவிற்சர்லாந்து நாட்டில் மக்கள் பங்களிப்புடன் உணர்வுபூர்வமாகவும் பேரெழுச்சியுடனும் நடைபெறவுள்ளது.
உலகெங்கும் பரந்து வாழும் போராளிகள், போராளிகள் கட்டமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புக்கள், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகள், இளையோர்கள்,
தனிநபர் ஆளுமைகள், பொதுமக்கள் என சகலரையும் ஒன்றிணைத்து இப்பெரும் நிகழ்வினை முன்னெடுக்கவுள்ளோம்.
எங்கள் தேசத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வை அனைவரதும் ஒத்துழைப்புடனும் பங்குபற்றுதலுடனும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் மேற்கொள்ளலாம் என்று உறுதியாக நம்புகிறோம்.
நன்றி.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்